Saturday, 29 December 2012




பார்த்தனுக்கு சாரதி ஆனவன்
பாரதிக்கு நண்பனாய், காதலியாய், சேவகனாய்..
சகலமும் ஆனான்..
எனக்கு உன்னைப்போல..
பாரதி போல் எழுதத்தான் முடியவில்லை..

Tuesday, 11 December 2012



முத்தெடுப்பதாய் எண்ணிக்கொண்டு 
மூழ்கித்தான் போனேன்..
முற்றாகத் தொலைந்தபின் 
முத்தெங்கே தேடுவது?
நீ...
உன் சிறு விரலைத் தான் நீட்டினாய்,
பற்றியதும் பற்றிக்கொண்டது உயிர்..
மூழ்குவது கண்டு விரலை விடவும் இல்லை..
இன்னொடு கை தரவும்  இல்லை..
அவ்விரலே ஊஞ்சலாய்,
ஆடிக்கொண்டே மூழ்கிப்போனேன்

Sunday, 18 November 2012


சாந்தனு ராஜாவின் நிலையானது எனக்கும்..
உன் செய்கைக்கான காரணம்  
புரிவதில்லை..
கேட்கவும் முடியாது..
கேட்டதும் மொத்தமாய் 
சென்றுவிட்டால்.?
மன்மோஹன்சிங் ஆகிப்போனேன்.. 

Saturday, 17 November 2012


மூச்சு நின்றால்தான் 
உயிர் பிரியுமா? 
என்னுடனான உன் பேச்சு  
நின்றாலும்...

Thursday, 8 November 2012


இருப்பதும் இல்லாதிருப்பதும் 
ஒரே நிலையானபோது
உணர்ந்தேன்... 
என்னைச் சுற்றிய 
உன் நினைவு வலையை...
வலையகற்றினால் 
என் நிலை தளர்ந்து போம்..
அதற்கு...
வலைக்குள்ளே வசிக்கலாம்
நிலை மறந்து!

Thursday, 25 October 2012


குழந்தைகள் மத்தியில் ஒருவர் 

அடுத்தவர்களையும் நேசிக்கக் கற்றுத்தருகிறார்..

"தன்னைப் போல் பிறரை நினை"யென்று 

என்னிடம் சொல்வதானால் 

அவளைப் போல் பிறரையும் நினையென...

Monday, 15 October 2012


செல்லும் இடமெல்லாம் 
கண்கள் உன்னைத் தேடும்..

நீ வந்திருக்க வாய்ப்பே 
இல்லையெனும் இடத்திலும்..
விவஸ்ததையில்லா 
என் மனம்...

Monday, 10 September 2012

என்னிடம்
இன்னும் ஒரு கேள்வி
மீதம் இருக்கிறது..
பதில் சொல்லப்  பிடிக்காத
என் கேள்விகளை என்ன செய்கிறாய்?


Sunday, 2 September 2012

உன் நட்பு

திருமணத்திற்கு முன்பான காலத்தில் 
நான் அறிந்திருக்கவேயில்லை,
அதைத் தாண்டிய பந்தம் ஒன்று,
எனை வெல்லும் என..
அறிந்திருப்பின் மறுத்திருப்பேன்...
...........................
உன்னையல்ல..
அன்பின் வெளிப்பாடாய் 
எதை எதையோ கிறுக்கி, 
அதையும் விடாது உனக்கனுப்பி 
பதிலுக்குக் காத்திருப்பது 
பாராட்டுக்கல்ல .....
எனதன்பை பகிரத்தான்..

நினைவுகள்

சிறிதும் பெரிதுமாய்
ஆயிரம் நினைவுகள் ...
அடுக்கி  வைக்க ஓர்
ஆயுள் போதாது..
அத்தனையும் உன்னுடனானவை
இந்த எண்ணம் ஒன்று போதும்
என் ஆயுள் நீளும்
ஆயிரம் காலம்...

Saturday, 1 September 2012

ஒவ்வொரு அணுவிலும்
உன்பெயர் இருக்க,
வேறு யாரிடம்
என் மனம் இருக்கும்?

வேலி

உன்னைச் சுற்றிச் சுற்றி
வருவதென்னவோ
நான் தான்...
என்னைச் சுற்றிலும்
உன் நினைவு வேலி...
எப்படி?

Tuesday, 7 August 2012

கிளம்பும் வரை அருகிருந்தாலும்,
அந்த நிமிடம் வரை
ஓயாது பேசினாலும்,
நீ சென்ற அடுத்த நொடியில்
மனம் அலறும்...
I MISS YOU..

ஒருமுறை திரும்பலாமே..
ஒவ்வொரு முறையும்
உனைக் கண் மறையும்வரைப்
பார்த்திருக்க..
திரும்பாமலே மறைந்து போகிறாய்..

Friday, 13 July 2012

எத்தனை பேர் எனைச் சுற்றி
 இருந்தாலென்ன...
ஓயாத வேலையில் உடல் களைத்தாலென்ன..
 மனம் மட்டும் எப்போதும்
 உற்சாகமாய் உந்தன் பின்னே....

Tuesday, 12 June 2012

ஒவ்வொரு முறையும் 

தொலைதூர பயணங்களின் இனிமையை 

ரசித்துக்கொண்டிருக்கும் போதே

 குறுக்கிட்டு விடுகிறது

 அடிமாட்டை ஏற்றிச்செல்லும் வண்டி ஒன்று ..:-(

Tuesday, 22 May 2012

மறப்பதும் மன்னிப்பதும்
 அத்தனை எளிதாய் இருந்தால்...
 உன்னை மறந்து,
அதற்காய் எனை மன்னித்தும் விடலாம்...

Wednesday, 16 May 2012

இந்த நிமிடம் எனை
நினைத்திருப்பாயோ?
இந்த நிமிடம் எனை
அழைப்பாயோ?
இந்த நொடியிலாவது 
குறுஞ்செய்தி அனுப்புவாயோ  
என ஒவ்வொரு நிமிடமும்
உன்னை நினைத்தபடியே நான்..

Tuesday, 15 May 2012

புறக்கணிப்பை விட
வலி தரும் வன்முறை
வேறொன்று உண்டா?

Sunday, 13 May 2012

மூளைக்கு தெரிவதெல்லாம் 
மனதுக்கு புரிவதில்லை..
சமயத்தில் புரிந்து கொண்டாலும்,
மனம் ஏற்பதில்லை..
ஏற்கும் வண்ணம் எல்லாம் நடந்தால்
இறைவன் இருப்பதை 
மறந்து போவோமோ?

யாசித்துப் பெறும் பொருள்
எத்தகு உயர்வானதாயினும்
யாசிப்பின் வலி
பெறுபவருக்குத்தான் தெரியும்..
அன்பு உட்பட..

Tuesday, 28 February 2012

உனக்கான முத்தங்கள் இன்னும்
இருக்கின்றன..
பலமுறை தந்துவிட எண்ணி
தரத் தயங்கியவை...
ஒருமுறை ஏதோ சோகத்தில்
நீ தவித்தபோது,
இன்னொரு சமயம்
கட்டுப்பாடில்லாத உன் அன்பினால்
எனைக் கட்டியபோது,
நெகிழ்ந்து போய்..
மற்றொருமுறை,
குழந்தை போல்
தலை சாய்த்து சிரித்த போது..
ஏன் இன்றும் கூட
உன்னிடம் மொத்தமாய் தந்துவிட
நினைத்தேன்,
வழக்கம் போல் இதையும்
சேர்த்து வைத்துவிட்டேன்!

Friday, 24 February 2012

கோபம்


உலர்ந்து போன கறையைப்போல்
உன் கோபம்
லேசில் போவதில்லை!
தவறு உன் மீதாயினும்
என் மீதாயினும்
கோபம் மட்டும் உன்னுடையது!
என் மௌனம்
மெல்ல மெல்ல வீட்டிலும் நிரவி
நிசப்தமகிப் போனது .
ஜன்னலுக்கு வெளியே மட்டும்
சந்தோஷமாய் மனிதர்கள்

Thursday, 23 February 2012

தோழி எழுதியதாய்
என் எண்ணம் வடித்ததை
காண்பித்த பின் தான் உணர்ந்தேன்,
உனக்கு கவிதையும் தெரியவில்லை,
என் காதலும் புரியவில்லையென!

சொல்லிவிடு

தினம் தினம் 
சொல்ல நினைப்பதை விழுங்கி,
வேறெதோ கதைகள் பேசி 
கிளம்பும் நேரம் 
போலியாய் சிரித்ததெல்லாம் போதும்,
இன்றாவது சொல்லிப்போ! 


இத்தனை படங்கள் பார்த்தும்,
ஆயிரம் கதைகள் படித்தும்,
இன்னுமா தோணவில்லை
எப்படி என்னிடம் சொல்வதென்று?

காற்றும் தூலுமாய்
எத்தனை அழகான மாலை,
இப்பொழுதே சொல்லிவிடேன்,
இதைவிட அருமையான மாலை நேரங்கள் 
நான் தருகிறேன்!


உனக்குப் பிடித்த சேலையில்
மெல்லமாய் வருகிறேன்..
சீக்கிரம் யோசித்து வை,
எப்படியும் இன்று சொல்லிவிடுவதென்று!


உன் கண்கள் சொல்வதை 
உதடுகள் சொல்லாதோ?
இருவர் காதலையும் 
ஒருத்தியை சுமப்பது போல் 
பாரமாய் இருக்கிறது..
சீக்கிரம் சொல்லேன்!


முதலில் ஒருமுறை நீ சொல்லிவிடு
இனி,,
தினம் தினம் நானே சொல்கிறேன்!

Friday, 3 February 2012

மழை


தூறலாய் பெய்யும் நேரம்
நனைய அழைக்கும் எனை!
சாரலைத் தூவும் போது
குடையோடு வாவெனும்,
பெருமழையாய் கொட்டும் நேரம்
ஜன்னலோரம் அமரச் செய்யும்!
எப்படி பெய்யினும் 
மழையோடு தான் மனம்!

நட்பு


துரியோதனன்,
எடுக்கவோ, கோர்க்கவோ 
எனக்கேட்காமல்,
எதைக்கேடிருந்தலும் 
இழந்திருப்பான் கர்ணனை!
நட்பின் அடிநாதம் 
நம்பிக்கை!

குழந்தை:


பிஞ்சு முகம்தனைப் பார்க்கையிலே
நெஞ்சு முழுதும் பஞ்சாகுதே!
அதன் பிஞ்சுக் விரல்கள்  தீண்டிவிடின் 
இறைவனைத் தீண்டிய இன்பம் காண்!.
அதன் அழைப்புகளெல்லாம் இசை!
மொத்தத்தில் மடியில் தவழும்
மலர்க்கூட்டம், குழந்தை!

முயற்சி


முயல் ஆமை 
கதைக்குப் பின் தான்,
ஆமையின் விடாமுயற்சி கண்டு, 
முயலுக்கு "முயல்"
என்ற பேர் வைத்தனரோ!
முயன்றால் முடியததென்ன?! 

தாய்


     

இவ்வுலகின்  அத்தனை 
இல்லங்களிலும் நிறைந்திருக்கும் 
இறைவனுக்கு
ஒரே பெயர் தான்,
'தாய்'