Sunday, 10 July 2011

வார்த்தைகள் விற்றுக்

கொஞ்சம்

மௌனத்தை வாங்கச் சென்றேன்..

வார்த்தைகள் கொள்வாரில்லை,

மௌனமும் தருவாரில்லை..

கோவத்தில் கொட்டுவதற்கும்,

நேசத்தில் அள்ளுவதற்கும்,

தேவையென நினைத்த வார்த்தை,

எல்லோரிடமும் நிரம்பி 

வீணென வழிந்து..


வாயடைத்துப்போனேன்..

மௌனம் தானாய் வசப்பட்டது!