Wednesday, 4 December 2019

கண்ணில் காணாமலே காலம் கடந்திருக்கலாம்,
பழக முடியாது தூரமிருந்திருக்கலாம்..
சில சமயங்கள் தவிப்புடன்
தவிரத்திருக்கலாம..
ஆயினும்
அகத்தினாழத்திலிருப்பினும்
பார்த்த மாத்திரத்தில் பற்றிக்கொள்ளும்
அன்பின் ஊற்று
நினைவுகளுக்கும் நிதர்சனங்களுக்கும் உள்ள இடைவெளி
“காலம்”...
மாற்றவே முடியாத நிகழ்வுகளும்
மறக்க இயலாத மனிதர்களுமாய்
எல்லோர் மனதிலும்
நினைவுகளின் கூடாரம்....
காலத்தை உள்ளடக்கி..❤️

எந்த நொடி பார்த்தாலும்
அந்த நொடியிலே பற்றிக்கொள்ளும்..
காணாதிருக்கும் போது - உள்ளே
 கனன்று கொண்டிருக்கிறதோ!
எதையெதயோ விஞ்சும் போதும்,
உனைப்பார்க்க கெஞ்சும் மனதிடம்
தோற்றுத்தான் போகிறேன்❤️
இந்த அழகான தோல்விக்கு அஞ்சுவதுமில்லை..