Monday, 6 June 2011

தண்மையும் வெம்மையும்
தனியொரு உருவாய்..
தனக்கென வட்டமிட்டு
கோலோச்சும் அரசாங்கமாய்..
சுற்றியுள்ளவரெல்லாம்
அன்பால் வசப்பட்டு,
பேச மறந்தவராய்..
அப்படியும் எல்லோருக்கும்
எல்லாமுமாய்
எப்படி முடிகிறது உன்னால்??!! 

நீ...



உறவும் இன்றி பகையும் இன்றி
பொதுவாய் தொடங்கிய உறவு ..
கிளைகள் விட்டு வளரும்
என்று நினைக்காத வளர்ச்சி!
என்று கருகுமோ என்ற
கவலையிலா அன்பு!
என் உயிரைக் கண்டு
இப்படி ஒர்  உன்னதம்
எனக்கும் வேண்டும் என
இறைஞ்சுவோர் பலர்..
எனக்கு கிடைத்தது வெறும்
 நட்பல்ல … வரம்!!
எத்தனை பிறவி எடுப்பினும்
பரவாயில்லை…
எனக்காக இந்த அன்பையும்
அனுப்பி வையும் இறைவா!