Saturday, 29 December 2012




பார்த்தனுக்கு சாரதி ஆனவன்
பாரதிக்கு நண்பனாய், காதலியாய், சேவகனாய்..
சகலமும் ஆனான்..
எனக்கு உன்னைப்போல..
பாரதி போல் எழுதத்தான் முடியவில்லை..

Tuesday, 11 December 2012



முத்தெடுப்பதாய் எண்ணிக்கொண்டு 
மூழ்கித்தான் போனேன்..
முற்றாகத் தொலைந்தபின் 
முத்தெங்கே தேடுவது?
நீ...
உன் சிறு விரலைத் தான் நீட்டினாய்,
பற்றியதும் பற்றிக்கொண்டது உயிர்..
மூழ்குவது கண்டு விரலை விடவும் இல்லை..
இன்னொடு கை தரவும்  இல்லை..
அவ்விரலே ஊஞ்சலாய்,
ஆடிக்கொண்டே மூழ்கிப்போனேன்