தோழி தொலைத்த
ஒற்றைக்கால் கொலுசுக்காக
எத்தனை நடையடி..
தெருவெங்கும் தேடியபடி
தவிக்கிறாய்..
தெருவே உன்னுடன் தவிக்கிறது..
தம்பி தொலைத்த
புத்தகத்துக்காய் பள்ளி வரை
ஓடுகிறாய்..
தவித்தபடி பலர் இதயம்
உந்தன் பின்னால்..
தனியே திரியும்
கோழிக்குஞ்சுக்கும்,
மழையில் நனையும் அணிலுக்குமாய்
என்னைத் தவிர
எல்லோர் மீதும் நீள்கிறது
உன் தவிப்பு..
என்னைப்பார்..
உன்னிடம் உள்ளத்தை
தொலைத்துவிட்டு
நிம்மதியாய் இருக்கிறேன்!