Friday, 24 February 2012

கோபம்


உலர்ந்து போன கறையைப்போல்
உன் கோபம்
லேசில் போவதில்லை!
தவறு உன் மீதாயினும்
என் மீதாயினும்
கோபம் மட்டும் உன்னுடையது!
என் மௌனம்
மெல்ல மெல்ல வீட்டிலும் நிரவி
நிசப்தமகிப் போனது .
ஜன்னலுக்கு வெளியே மட்டும்
சந்தோஷமாய் மனிதர்கள்