தாய்மை என்பது
தாய்க்கு மட்டுமே
சொந்தமல்ல..
எல்லா உயிரிடத்தும்
ஒளிந்துள்ள பொக்கிஷம்!
தவறு செய்யின், கண்டிப்பும்,
உணர்ந்த பின் மன்னிப்பும்..
இவற்றைப் புறந்தள்ளி
மழை போல் பொழியும் அன்பும்
தாய்மையன்றி வேறென்ன..?
ஒரு தாய் தன் சேயின்
நன்மைக்கென ,
விரும்பிச் செய்யும் செயலொத்ததே,
பிறர் துன்பம் தீர்க்கும்
எந்தச் செயலும்!
அடுத்தவர் கண்ணீர்
துடைக்க நீளும்
அத்தனை விரல்களிலும்
வழிகிறது தாய்மை!