Sunday, 13 May 2012

மூளைக்கு தெரிவதெல்லாம் 
மனதுக்கு புரிவதில்லை..
சமயத்தில் புரிந்து கொண்டாலும்,
மனம் ஏற்பதில்லை..
ஏற்கும் வண்ணம் எல்லாம் நடந்தால்
இறைவன் இருப்பதை 
மறந்து போவோமோ?

யாசித்துப் பெறும் பொருள்
எத்தகு உயர்வானதாயினும்
யாசிப்பின் வலி
பெறுபவருக்குத்தான் தெரியும்..
அன்பு உட்பட..