Anbendraal..
Thursday, 16 June 2011
உன்னிடமிருப்பது
தொற்றுவியாதி தான்..
அருகில் நீ வந்ததும்
என் முகத்திலும் தொற்றிக்கொண்டது...
உன் புன்னகை!
காண வருகையில்
தூரம் தெரிவதில்லை..
திரும்புகையில்,
நீண்ட சாலைகளும்,
அதைவிட நீண்ட சாரியில்
வாகனங்களுமாய்..
பொழுதும் நீள்கிறது!
எழுதுவதெல்லாம்
உனக்கென்றானபின்,
எழுத்தைவிட இனியது எது?!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)