உனக்கான முத்தங்கள் இன்னும்
இருக்கின்றன..
பலமுறை தந்துவிட எண்ணி
தரத் தயங்கியவை...
ஒருமுறை ஏதோ சோகத்தில்
நீ தவித்தபோது,
இன்னொரு சமயம்
கட்டுப்பாடில்லாத உன் அன்பினால்
எனைக் கட்டியபோது,
நெகிழ்ந்து போய்..
மற்றொருமுறை,
குழந்தை போல்
தலை சாய்த்து சிரித்த போது..
ஏன் இன்றும் கூட
உன்னிடம் மொத்தமாய் தந்துவிட
நினைத்தேன்,
வழக்கம் போல் இதையும்
சேர்த்து வைத்துவிட்டேன்!
No comments:
Post a Comment