Anbendraal..
Friday, 3 February 2012
மழை
தூறலாய் பெய்யும் நேரம்
நனைய அழைக்கும் எனை!
சாரலைத் தூவும் போது
குடையோடு வாவெனும்,
பெருமழையாய் கொட்டும் நேரம்
ஜன்னலோரம் அமரச் செய்யும்!
எப்படி பெய்யினும்
மழையோடு தான் மனம்!
நட்பு
துரியோதனன்
,
எடுக்கவோ
,
கோர்க்கவோ
எனக்கேட்காமல்
,
எதைக்கேடிருந்தலும்
இழந்திருப்பான்
கர்ணனை
!
நட்பின்
அடிநாதம்
நம்பிக்கை
!
குழந்தை:
பிஞ்சு முகம்தனைப் பார்க்கையிலே
நெஞ்சு முழுதும் பஞ்சாகுதே!
அதன் பிஞ்சுக் விரல்கள்
தீண்டிவிடின்
இறைவனைத் தீண்டிய இன்பம் காண்!.
அதன் அழைப்புகளெல்லாம் இசை!
மொத்தத்தில் மடியில் தவழும்
மலர்க்கூட்டம், குழந்தை!
முயற்சி
முயல் ஆமை
கதைக்குப் பின் தான்,
ஆமையின் விடாமுயற்சி கண்டு,
முயலுக்கு "முயல்"
என்ற பேர் வைத்தனரோ!
முயன்றால் முடியததென்ன?!
தாய்
இவ்வுலகின்
அத்தனை
இல்லங்களிலும்
நிறைந்திருக்கும்
இறைவனுக்கு
ஒரே பெயர் தான்,
'தாய்'
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)