Thursday, 23 February 2012

சொல்லிவிடு

தினம் தினம் 
சொல்ல நினைப்பதை விழுங்கி,
வேறெதோ கதைகள் பேசி 
கிளம்பும் நேரம் 
போலியாய் சிரித்ததெல்லாம் போதும்,
இன்றாவது சொல்லிப்போ! 


இத்தனை படங்கள் பார்த்தும்,
ஆயிரம் கதைகள் படித்தும்,
இன்னுமா தோணவில்லை
எப்படி என்னிடம் சொல்வதென்று?

காற்றும் தூலுமாய்
எத்தனை அழகான மாலை,
இப்பொழுதே சொல்லிவிடேன்,
இதைவிட அருமையான மாலை நேரங்கள் 
நான் தருகிறேன்!


உனக்குப் பிடித்த சேலையில்
மெல்லமாய் வருகிறேன்..
சீக்கிரம் யோசித்து வை,
எப்படியும் இன்று சொல்லிவிடுவதென்று!


உன் கண்கள் சொல்வதை 
உதடுகள் சொல்லாதோ?
இருவர் காதலையும் 
ஒருத்தியை சுமப்பது போல் 
பாரமாய் இருக்கிறது..
சீக்கிரம் சொல்லேன்!


முதலில் ஒருமுறை நீ சொல்லிவிடு
இனி,,
தினம் தினம் நானே சொல்கிறேன்!

No comments:

Post a Comment