Wednesday, 4 December 2024

தேடல்..

 ஒரு தேடலில் ஆரம்பித்த உறவு

வேறொரு தேடலை முடித்து வைத்தது..

முகமறியா நபராய் நுழைந்து

என் உள்முகமாய் ஆகிவிட்டாய்..

ஜென்மஜென்மமாய் தொடர்வது

போல் ஒரு பிரியம்..


ஒற்றை வருடம் தானெனில் 

நம்பத்தான் முடியவில்லை..

ஒவ்வொரு நினைவிலும்-உன்

பெயரெழுதிவிட்டாய்!


நினைவொன்று தோன்றுமுன்

பகிரத்துடிக்கும் - மனம்

அறிந்துவிட்டது போலும்

அடையும் இடம் எதுவென்று..


நாட்களை ஸ்வாரஸ்யமாக்குவது

நித்தம் பேசும் சிலமணித்துளிகள் தாம்..

அது மற்றவர் அறியா 

ரஹஸ்யங்களாகட்டும்..

ஊரறிந்த செய்தியாகட்டும்,

ஒவ்வொரு வார்த்தையும் ரசனை தான்..

வார்த்தைகளூடே வெளிப்படும்- உன் 

சிரிப்பிற்கென வாழ்வை எழுதிக்கொடுக்கலாம்..


அன்பின் வெளிப்பாடெல்லாம் 

தேவையில்லை என்றாலும்

சொல்லித்தானாக வேண்டும்..

உனைத்தாண்டி இனி வெறெதுவும்

வேண்டேனென்று..

ஒரு ஆயுளுக்கான தேடலின்

முடிவு நீ..

No comments:

Post a Comment