ஒரு தேடலில் ஆரம்பித்த உறவு
வேறொரு தேடலை முடித்து வைத்தது..
முகமறியா நபராய் நுழைந்து
என் உள்முகமாய் ஆகிவிட்டாய்..
ஜென்மஜென்மமாய் தொடர்வது
போல் ஒரு பிரியம்..
ஒற்றை வருடம் தானெனில்
நம்பத்தான் முடியவில்லை..
ஒவ்வொரு நினைவிலும்-உன்
பெயரெழுதிவிட்டாய்!
நினைவொன்று தோன்றுமுன்
பகிரத்துடிக்கும் - மனம்
அறிந்துவிட்டது போலும்
அடையும் இடம் எதுவென்று..
நாட்களை ஸ்வாரஸ்யமாக்குவது
நித்தம் பேசும் சிலமணித்துளிகள் தாம்..
அது மற்றவர் அறியா
ரஹஸ்யங்களாகட்டும்..
ஊரறிந்த செய்தியாகட்டும்,
ஒவ்வொரு வார்த்தையும் ரசனை தான்..
வார்த்தைகளூடே வெளிப்படும்- உன்
சிரிப்பிற்கென வாழ்வை எழுதிக்கொடுக்கலாம்..
அன்பின் வெளிப்பாடெல்லாம்
தேவையில்லை என்றாலும்
சொல்லித்தானாக வேண்டும்..
உனைத்தாண்டி இனி வெறெதுவும்
வேண்டேனென்று..
ஒரு ஆயுளுக்கான தேடலின்
முடிவு நீ..
No comments:
Post a Comment