அகமும் முகமும் மலர்ந்தே இருக்க
அற்புதமென அனைத்தையும் கொண்டாடினோம்..
ஆனந்தமாய் இருப்பதே அடையாளமென
ஆழ்மனதுள் அன்பைமட்டுமே சுமந்தோம்..
இல்லத்தைக் காட்டிலும் இனிதானது நம்
இருக்கை என இறுமாந்திருந்தோம்!
ஈக்களைப் போல் அங்கிங்கெனாதபடி
எங்குமிருந்தோம்..
உன்னைச் சொன்னால் என்னையும் என
உடன் நின்ற நேரமெல்லாம் மறக்குமோ!
ஊரும் உறவும் பிரமித்தனர் நம் நட்பு கண்டு..
என்னைச்சுற்றி இருப்பதெல்லாம் உன்னுடையவைகளாக..
ஏனென்று கேள்வி எழாத நம்பிக்கைகளுடன்,
ஐயம் ஏதுமிலா திறந்த புத்தகமென வாழ்ந்தோம்..
ஒப்பிட்டு சொல்லும் நட்பிற்கு உதாரணமானோம்..
ஓய்வறியா மனமும் அடங்கும் உன் அருகில்
ஒளஷதமொன்று யாருக்கும்தேவையில்லை
இப்படி ஒரு அன்பு அமைந்தால்..🙏
——
No comments:
Post a Comment