Monday, 27 October 2014


சாதாரணமாய்  அவ்வப்போது  வந்து போகும்  
உன் நினைவு, 
சில நாட்களை துவக்கியும் 
பெரும்பாலான நாட்களை முடித்தும்  வைக்கும்..
ஆயினும் இன்று போல்  ஒரு  சில நாட்களில் 
நான் எழுமுன் துவங்கி  
வேறெதுவும்  நினையாது,
செயல்களிலும் மனம் செல்லாது, 
உன்னிடம் மட்டுமே 
நின்று போகும்..
விடியற்காலை  கனவில் துவங்கி  
கவிதையாய்  இரவு வரை...
அத்தகு நாட்கள் தான் எத்தனை  இனிமை...

No comments:

Post a Comment