உனதன்பு வைரத்தைவிட உயர்ந்தது,
அபூர்வமாய் தான் பார்க்க முடியும் ...
உன் மீதான எனதன்பு
வைரம் போன்றது..
வெளிக்காட்டும் போது
சிலநேரம் ரசனையாய் அழகாய்..
சிலநேரம் கண்கள் கூசி
தவிர்க்க வேறு பக்கம்
திரும்பவும் நேரலாம்..
சங்கடம் தவிர்க்க
விழுங்கிவிடலாமென்றால்
உள்ளே அறுத்து விடுகிறது..
செய்வதறியாது நான்..
No comments:
Post a Comment