Monday, 27 October 2014

தவறு

நீ எது செய்தாலும் சரிதானெனும் நான்,
எங்கு தவறுகிறேன்?
தவறு யாதென புரியாத வரையில்
தண்டனை மட்டும் திருத்தி விடுமா?
அன்பின் உச்சமாய் எனை நினைத்திருக்க,
தவறுகளின் எச்சமாய் உனக்குத் தெரிவதும்
தண்டனையாய் தவிர்ப்பதும்
அன்பினால் ஆவது தானா?
ஒவ்வொரு முறையும் பதிலளிக்கப்படாத
என் விசாரிப்புகள், 
எனை ஏளனம் செய்வதை அறிவாயா?
முன்பெல்லாம் எனைக் காணவென 
நீ வந்த பொழுதுகள்
நினைவுகளில் மட்டுமாகிப் போனது..
எழுதி முடிக்க இயலாத வரிகள் 
மனமெங்கும்...

No comments:

Post a Comment