Tuesday, 14 March 2023

மீண்டும் மீண்டும்…


உன்னைப் பார்க்காத வரையில் பாதகமில்லை, 

பிரிவுத் துயர் தான்..

பேசாதிருக்கயிலும் கஷ்டமில்லை,
அருகிலில்லாத  ஏக்கம் மட்டும் தான்..
ஆனால், 
பார்த்துவிட்டால்  போச்சு..
அதற்கு மேல் 
ஓரிரு வார்த்தை பேசிவிட்டலோ,
உன்னிடமே  
தொலைந்தது தான் போய்விடுகிறேன். .
மீட்டு வருவதாகச் சொல்லி  
மீண்டும் மீண்டும் உன்னிடமே..
இத்தனை  மாயம்  செய்யும்  
அந்த வசியச் சிரிப்பை 
எப்படி  காணாதிருப்பது?

No comments:

Post a Comment